Translate

செவ்வாய், 16 ஜூலை, 2013

குடியை மறக்க வைக்கும் மந்திரம்

          இன்றைய நவீன உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வே சுன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதி படுவோர் பலர். அவர்களின் வாழ்வை வளமாக்கவே இதனை எழுதுகிறேன்.ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓங்காரம் (ஓம்) வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து " ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக" - 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவான்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

பெண்களை வசியம் செய்ய

         
சில  குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.
       விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...
         இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..
         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.
         வெள்ளிக்கிழமை தினம் தன் நட்சத்திர பட்சி ஆட்சி செய்யும் வேளையில் மிளகு சாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து கிழக்கே போகும் வேரை எடுத்து வசிய மந்திரம் (யநமசிவ) என்று 1008 உரு சொல்லி தாயத்தில் அடைத்துக் கட்டிக்கொண்டால் பார்க்கும் அனைத்து பெண்களும் வசியமாவார்கள்.
          எந்த வசிய முறையையும் குரு வழிகாட்டுதலுடன் செய்ய உடனே பலன் தரும்..

ஆண் - பெண் வசிய விளக்கம் :

1. ஆடை :
                     வசியமாக்க வேண்டியவரின் ஆடை (அவர் பயன்படுத்திய உடை ) ஒன்றில் அவர் பெயரையும் வசிய மந்திரத்தையும் எழுதி பூஜையில் வைத்து தீபமேற்றி காலையும் மாலையும் தீபசுடரில் காட்டி வரவேண்டும். இப்படி செய்ய வசியமாக வேண்டியவர் உங்களுக்கு வசியமவார்.

2. தலைமுடி :
                            வசியமாக்க வேண்டியவரின் தலைமுடியினை கொண்டுவந்து துளசி செடியின் வேரை பிடுங்கி அதில் தலைமுடியை சுற்றி பூஜையில் வைத்து காலை மாலை வசிய மந்திர உருவேற்ற வேண்டும் இவ்வாறு செய்தால் 7 நாட்களில் வசியமாகும்.

3.ஐவகை எண்ணெய் :
                                            ஐவகை எண்ணையை ஒரு பாட்டிலில் கலந்து வசியமாக வேண்டியவரின் பெயரை சொல்லி வசிய மந்திர உருவேற்றி ஒரு சுரையில் அடைத்து இடுப்பில் கட்டிக்கொள்ள 21 நாளில் வசியம்.

4. ஐவகை வேர் :
                                 ஐவகை வேர்களை கொண்டுவந்து எரித்து சாம்பலாக்கி அதை பூஜை தட்டில் பரப்பி ஆண் - பெண் வசிய சக்கரம் அதில் எழுதி வசிய மந்திர உரு செய்து அந்த சாம்பலை ஒரு தாயத்தில் அடைத்து கட்டிக்கொண்டு அல்லது நெற்றியில் வைத்துக்கொண்டு மீதி சாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவ 7 நாளில் வசியமாம்.

5.சிறுநீர் :
                    குப்பை மேனி செடியை பிடுங்கி கொண்டுவந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரை பிடித்து அதில் மூன்று நாள் ஊறவைத்து பின் குப்பை மேனியின் வேரை துண்டித்து வசிய மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிய வசியமாகும்.

6.தாலிப்பனை ஓலை :
                                              வசியமாக்க வேண்டியவரின் வீட்டிலிருந்து 7 உப்பு கற்களை எடுத்து வந்து ஒரு தாலிப்பனை ஓலையில் வசிய சக்கரம் வரைந்து அதில் வசியம் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி பூஜையில் வைத்து வசிய மந்திர உருவேற்றி அந்த தாலிப்பனை ஓலையில் வசியம் செய்ய வேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் பூமியில் புதைக்க வேண்டும். அந்த 7 உப்பு கற்களையும் வசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தால் வசியமாம்.

                     ஆண் - பெண் வசியத்தில் இன்னும் பல முறைகள் உள்ளன. இருப்பினும் வாசகர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சில முறைகளை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறேன். இது தவறான முறையில் பயன்பட்டு விட கூடாது என்பதால் தான் இங்கு வசிய மந்திரங்களை தெளிவாக எழுதவில்லை. நல்லவைக்காக வசியம் தேவைப் படுவோர் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும். சர்வ சக்தி விருட்ச பீடம் - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள், செல் : 099440 99980, 085260 74891.

மனிதர் முதல் தெய்வம் வரை வசியம் செய்ய

        நல்லதொரு பூச நட்சத்திரத்தில் சந்தன மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புல்லுருவிக்கு மஞ்சள் நூல் காப்புகட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பொங்கல் இட்டு திரும்பி வந்து அடுத்த நாள் காலையில்  சென்று தூப தீபம் காட்டி வெள்ளை சாவல் பலி கொடுத்து இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்கள், நகங்கள் பத்தும் படாமலும் எடுத்துவந்து சாறு பிழிந்து மண் சட்டியில் தடவி காயவைத்து,  அதன்பின் சந்தன வில்லையை பொன்ணாங்கண்ணி சாறு விட்டு குழைத்து மண் சட்டியில் பூசி காயவைத்து , அதன் மேல் புத்துதேனை பூசி , கற்பூரம் ஏற்றி புகையை மண்சட்டியில் பிடித்து சட்டியில் உள்ள மையை வழித்து டப்பாவில் பத்திரபடுத்தவும். வெளியில் செல்லும் போது வினாயகரை மனமாற வேண்டி பொட்டிட்டு கொண்டு போக தேவர் முதல் மனிதர்வரை அனைவரும் வசியமாவார்கள்.

மூலிகை சாப நிவர்த்தி

       மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து  பொங்கல் நைவேத்யம்  வைத்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா- என 108 உரு சொல்லியும், சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.

     மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :
                 வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,
                 மோகனத்திற்கு - திங்கள்கிழமை,
                 ஏவலுக்கு - செவ்வாய்கிழமை
                 தம்பனம் - புதன்கிழமை,
                 உச்சாடனம் - வியாழன்,
                 ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
                 மாரணம் - சனி

   மூலிகை பறிக்க உகந்த திசைகள் :
                  வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,
                  மோகனம் - தெற்கு,
                   உச்சாடனம் - மேற்கு,
                   பேதனம் - வடக்கு,
                    ஏவல், தம்பனம் - தென்மேற்கு,
               
மேலும் சில காரிய்களுக்கு உரிய நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது எடுக்க வேண்டி வரும் அந்த நாளில் செய்ய பலிதம் ஆகும்.
                   

சகல ஜீவராசிகளை வசியம் செய்ய

         
              கள்ளி காக்கை (செம்போத்து பறவை) ஒன்றை பிடித்து ஓடுகின்ற ஆற்று நீரில் போய் அமந்து அதன் முடியை ஒவ்வொன்றாக பிடுங்கி நீரில் போட அதில் எந்த முடி தண்ணீரை எதிர்த்து வருகிறதோ அதை எடுத்து பத்திரப்படுத்தவும். அந்த முடியை தங்கத்தில் தாயத்து செய்து அதில் அடைத்து கட்டிக்கொள்ள சகல ஜீவராசிகளும்  வசியமாகும்.
             இதற்கு வசிய மந்திரம்  ''ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும் உவ்வும் சவ்வும் வசிய வசிய சுவாஹா'' என்று 1008 உரு ஏற்றவும்.
             இந்த வசியத்தை தவறாக தெரிந்துள்ள பலரும் செம்போத்து கூட்டில் ஒரு வேர் இருக்குமென்றும் அது தண்ணீரை எதிர்த்து செல்லும் அதுவே வசியத்திற்கு உதவும் என்று தவறாக எண்ணம் கொண்டுள்ளனர். அது தவறு குயிலை போலவே செம்போத்தும் கூடு கட்டி வாழ்வதில்லை என அறிக.
            

ஆண் பெண் குடும்ப வசியம்

        இன்றைய  காலத்தில் பல குடும்பங்களில் ஒற்றுமை என்பது குறைவாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து பெற்றவர் பலர். சரி கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுபினர்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் அனாதை ஆசரமங்களில் தவிக்கவிட்டவர்கள் பலர். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகும். வாழும் போதே சொர்க்கம் காணலாம். இப்படி வாழ எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் முடியவில்லையே, காரணம் ஒருவருக்கு ஒருவர் வசியம் இருக்காது. இந்த நிலை மாற பலர் என்னிடம் வழி கேட்டனர். இதோ அந்த வசியத்துக்கு வழி
             வெள்ளெருக்கு, அழுகண்ணி, கோரோசனை, மண்டூகபிட்சு இவைகளை எருக்கின் பழுத்த இலைகளின் சாரல் அரைத்து மையை எடுத்து வசிய மந்திரம் 1008 உரு சொல்லி மையிக்கு உயிர் கொடுத்து, அதன் பின் நமக்கு இஷ்டமனவர்கள் மேல் தடவ அவர்கள் வசியமகி நம்மை விட்டு பிரியமட்டர்கள். 

கோபுரம் தாங்கி மூலிகையின் அற்புத சக்தி

         இந்த கோபுரம் தங்கி மூலிகையை சபநிவர்த்தி செய்து, காப்பு கட்டி எலுமிச்சை கனி பலி கொடுத்து, பொங்கல் நிவேதனம் செய்து, தூபம், தீபம் காட்டி பிடுங்கி வைத்து கொள்ளவும். இந்த இலையை வாயில் போட்டு மென்றுகொண்டு தாடையில் வைத்துகொண்டு  கண்ணாடியை கற்கண்டு போல கடித்து துப்பலாம், கண்ணாடி வாயை கிழிக்காது , இந்த மூலிகையின்  வேரை தயத்தில் அடைத்து காலில் கட்டிக்கொண்டு பெரிய பாரங்கல்லை எட்டி உதைத்தால் பாராங்கல் உருண்டோடும் நம் காலுக்கு ஒன்றும் தெரியாது. 

பகைவர்களும் உறவாக

இன்றைய அவசர உலகில் தொழில், வியாபாரம், குடும்பம், கணவன் - மனைவி , நண்பர்கள் எல்லா உறவுகளிலும் ஒற்றுமை உணர்வு இல்லாமல் பகை உணர்வை வளர்த்துக் கொண்டு அதனாலும், கடன்களை வங்கிக் கொண்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டு அவர்களை கண்டால் பயந்து ஓடி ஒளிபவர்கள் பலர் . இப்படி சரியான புரிதல் இல்லாமல் பகையளியாய் பலப் பல துன்பங்களை அடைபவர்கள் கேட்கும் ஒரே கேள்வி இதிலிருந்து எப்போது விடுதலை எனபதுதான். அதற்கு தான் இந்த அற்புத தீர்வு.
            ஒரு அஸ்தம் நட்சத்திரம் வரும் நல்ல நாளில் அமிர்த யோகமும் கூடிய நேரத்தில் கீழ் சொல்லும் பொருட்களை கல்வத்தில் போட்டு அரைக்கவேண்டும். அமிர்தயோகம் துவங்குவதற்கு முன்பே பொருள்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும். பொருள்கள் : செம்போத்து பறவையின் கரும்விழி
, சீதேவி செங்கழுநீர் சமூலம், வெட்டியா நகங்கள், பேடை மயிலின் பிச்சு, மாடப்புறா எச்சம் இவைகளை சமமாக போட்டு கல்வத்தில் அரைக்கவும் அரைத்த பின் அதனுடன் தேன் கலந்து செம்பாலான டப்பாவில் வைக்கவும். இதனை கலையிலும் மலையிலும் உங்கள் புருவத்தில் பூசி வந்தால். எவ்வளவு பெரிய பகையாளி ஆனாலும் உங்களுடன் மீது இறக்கம் காட்டி ஆதரிப்பார்கள் குடும்பத்திலும் அலுவலகத்திலும் பகைமை உணர்வு மாறி அன்புகொள்வார்கள்.

சனி, 6 ஜூலை, 2013

புத்திர பாக்கியம் தரும் - விருட்சம்

         புத்திர பாக்கியம் வேண்டி ஏங்கி தவிக்கும் தம்பதியினர் பலர், இவர்களின் புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் ஒரு பரிகார மரம் ஒன்று உண்டு என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. இம்மரம் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்திலும் நட்டு சாஸ்திர முறைப்படி வளர்க்கப்பட்டும் வருகிறது. உலக மக்களின் புத்திர பாக்ய வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புத்திர தோஷ  பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சம் இலந்தை மரம் எனும் முட்கள் நிறைந்த சிறு மரம். இம்மரத்தில் சந்தான கணபதியும், மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால் இம்மரத்தை வணங்கும் போது புத்திரபாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாக அருள்பாலிக்கிறார்.
  இந்த மரத்தினை அதிகாலையில் சந்தன லட்சுமி மந்திரத்தை 16 முறை சொல்லி வலம்வந்து, அதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அத்துடன் 10 மிளகு சேர்த்து அரைத்து, பெண்கள் மாத விலக்கான மூன்று நாட்களும் சாப்பிட கருவறையை சுத்தப்படுத்தி கரு உண்டாக செய்கிறது.

திங்கள், 1 ஜூலை, 2013

ஆலயங்களை வலம் வரும் முறை

          நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று வணங்கிவருகிறோம். ஆலயத்தில் நாம் பிரகாரங்களை சாஸ்திரமுறைப்படி வலம்வருவதால் நம் வேண்டுதல் உடனே நிறைவேறும். ஆலயங்களை வலம்வரும் முறையை இங்கு காணலாம்.

வினாயகரை - ஒருமுறையும்,
சிவனையும்,அம்மனையும் -  மூன்று முறையும்,
சித்தர், மகான்களின் சமாதியை - நான்கு முறையும்,
பெருமாள்- அம்மனை - நான்கு முறையும்,
அரசமரம், தலவிருட்சங்களை - ஏழு முறையும்,
நவகிரகங்களை - ஒன்பது முறையும் வலம் வர வேண்டும்.

            எக்காரணம் கொண்டும் தன்னை தானே வலம் வர கூடாது. தெய்வங்களை வலம்வரும் பொழுது அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்தோத்திர பாடல்களை சொல்லி வலம் வருதல் நலம் பயக்கும்.கோவில் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து நமஸ்காரம் செய்யவும்.