Translate

வியாழன், 26 டிசம்பர், 2013

யோகா முத்திரைகள்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் 

யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கப தத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத் தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

திங்கள், 23 டிசம்பர், 2013

வேங்கை மரமும் சில உண்மைகளும்

                   
வேங்கை மரமும் சில உண்மைகளும்  என்ற தலைப்பில் வேங்கை மரம் எத்தனை வழிகளில் எந்தெந்த வழிகளில் மனிதனுக்கு பயன்படுகிறது என்பதனை பற்றி நாம் ஆராய இருக்கிறோம்.

                 வேங்கை மரம் நவ கிரகங்களில்  செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியும். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் சிவப்பு நிறமாகும். நம் தமிழ் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.

                 வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது. ஆங்கில தேதி 9,18,27 ல் பிறந்தவர்களும் மேஷம் விருச்சிகம் இராசியில் பிறந்தவர்களும் இம்மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொள்வதால் இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும் வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வளமான வாழ்வு தரும் கருணை கல்

                                 வளமான வாழ்வு தரும் கருணை கல்

                                      

வளமான வாழ்வு தரும் கருணை கல் பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காணலாம் . நாம் அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதில் இராசி கற்களையும், நவரத்தினங்களையும், உபரதினங்களையும் அதன் குணங்களையும் கேட்டும் படித்தும், அனுபவத்தில் வாங்கி உபயோகப்படுத்தியும் இருப்போம்.நவரத்தினங்கள் என்பது மாணிக்கம், முத்து, புஸ்பராகம், கோமேதகம், வைரம், மரகதம், வைடூர்யம், நீலம், பவளம் ஆகும். உப இரத்தினங்கள் என்பவை டோபாஸ், அமிதிஸ்ட், சன் ஸ்டோன், மூன்ஸ்டோன், கார்னெட், டைகர்ஸ் ஐ, ஜிர்கான் போன்றவைகள் ஆகும். இந்த கற்கள் எல்லாம் ரசியின்படியும், எண்கணிதத்தின் படியும் ஜோதிடர்களால் நமக்கு சொல்லப்படும் கற்களாகும். இவைகள் கிரக ரீதியில் வரும் கேடு பலன்களை குறைத்து நமக்கு நல்ல பலன்களை வழங்குவதற்காக இறைவனால் உண்டாக்கப்பட்டது ஆகும்.

                ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது வளமான வாழ்வு தரும் கருணை கல். இது உலகிலேயே கிடைப்பதற்கு அரிதான அறிய அற்புதமான கல் ஆகும். உலகம் முழுவதும் பல கல கட்டங்களில் பல சித்தர்களும், ஞனிகளும் தோன்றி பல அற்புதங்களை செய்துவந்ததை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இவ்வகையில் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மலையில் ஒரு அபூர்வ சித்தர் பல ஆண்டு காலமாக கடும் தவம் இயற்றி வந்தார். பலகாலமாக தவம் செய்து வந்த அந்த சித்தரின் சக்தி முழுவதும் அவர் அமர்ந்து தவம் செய்த அந்த மலை முழுவதும் வியாப்பித்து பரவியது. அந்த சித்தர் பல சித்திகளை பெற்று இறுதியில் அந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.
      
                   அந்த சித்தரின் சக்தி எல்லாம் ஒன்று கூடி பாதரசம் போல மாறி அந்த மலை முழுவதும் இருக்கிறது. வருடத்தின் ஒரு குறிப்பிட்ட புனிதமான நாளில் இது மலையில் இருந்து வெளியில் வருகிறது. இந்த பாதரசம் போன்ற திரவமே முன்பு நான் குறிப்பிட்ட வளமான வாழ்வு தரும் கருணை கல் ஆகும். பாதரசம் போன்ற திரவம் எப்படி கல்லாகும் என்ற கேள்வி எழலாம்.

                      இது எப்படி சாத்தியமாகிறது என்றல் அந்த மலையில் இன்றும் பல தவ சீலர்கள் தன்னலம் இன்றி ஆசா பாசங்களை துறந்து தவம் செய்து வருகிறார்கள். இவர்களை புத்தாஸ் (சித்தர்) என்று அங்கு அழைக்கிறார்கள். அந்த பாதரசம் போன்ற திரவம் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் வெளிவரும் போது சில மந்திரங்களை பிரயோகம் செய்கிறார்கள். அந்த மந்திரங்களின் சக்தி பாதரசம் போன்ற திரவத்தை கல்லாக மாற்றுகிறது. பொதுவாக எந்த கற்களும் காந்தத்தில் ஒட்டுவதில்லை. ஆனால் இந்த அற்புத கல் காந்தத்தில் ஒட்டுகிறது. இத்தகைய அற்புத கல்லை ஒரு வருட காலம் போராடி அந்த அற்புத மலையில் தவமியற்றும் புத்தாஸ் (சித்தர்) இடம் பெற்றோம்.


                      இந்த அற்புத கல்லின் சக்தி என்ன?  இந்த கல்லை நாம் உடலில் அணிவதால் தெய்வங்கள் நமக்கு வசியமாகும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நம்முடன் தெய்வங்கள் இருந்து வழிநடத்தும், அந்த செயல்கள் அனைத்திலும் வெற்றியை பெற்று தரும். இந்த அற்புத கல் ஜன வசியம், தன வசியம், தொழில் வசியம், புகழ், மேன்மை, வெற்றி, பாதுகாப்பு தருகிறது. இந்த அற்புத கல்லின் சக்தியை சொல்ல வார்த்தைகளில் அடங்காது. இந்த கல் நமது வாழ்வை வளமானதாக மாற்றுகிறது. தாய்லாந்தில் இந்த கல்லை நாம் பெரும் போது அந்த சித்தரிடம் இதனை பெறும்போது இந்த கல்லின் பெயரை கேட்டபோது தாய்லந்து வார்த்தையில் ஒரு பெயரினை சொன்னார். அதன் தமிழாக்கம் கருணை கல். அதாவது இந்த கல்லை நாம் அணிவதால் இறைவனின் கருணையுடன் நமக்கு உதவுவார்.  இந்த வளமான வாழ்வு தரும் கருணை கல் இந்த ஆண்டு 17 கற்கள் இறைவன் திருவருளால் எனக்கு கிடைத்தது. இந்த அற்புத கற்கள் பிராப்தம் உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தேவைப்படுவோர் சர்வ சக்தி விருட்ச பீடத்தை உடனே தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள். செல் : 99440 99980, 85260 74891.