Translate

சனி, 30 நவம்பர், 2013

ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை

             ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை பற்றி இங்கு காணலாம். உலகிலேயே மாந்திரீக முறையில் ஜாம்பவான்கள் மட்டுமே உபயோகித்து இன்று மறைந்து போன முறைகளில் ஒன்று மோடி வித்தை. இத்தகைய மாந்திரீக முறையை செய்பவர்களை மோடி மஸ்தான் என்பார்கள்.
               
           ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை என்பது  ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்கள் மந்திரீகரிடம் நேரில் வராமலேயே அவர்களுக்கு உண்டான ஏவல் பில்லி சூனியத்தை நீக்குவதாகும்.
                                                  
                       

           ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தையில்  சுடுகாட்டு மண்ணை கொண்டு ஒரு பாவை செய்து அதில் ஏவலை நீக்குவதற்கு உண்டான எந்திரத்தை எழுதி அந்த பாவையின் ஆசன வாயில் சொருகி ஏவலால் பாதிக்கப் பட்டவரின் கைவிரலில் வெட்டப்பட்ட நகங்களை பாவையின் நகங்களில் பொருத்தி, பின் ஏவலால் பாதிக்கப் பட்டவரின் உச்சந்தலை முடியை பாவையின் உச்சந்தலையில் பொருத்தி, பாவையின் கண்களுக்கு சிவப்பு நிற கற்களை வைத்து பாவை உருவாக்கப்படும்.

           அந்த பாவை ஓரிடத்தில் நிற்க வைத்து அதன் அருகிலே ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை வைத்து பாவையையும் போட்டோவையும் தனித்தனியாக ஒன்பது முறை நூலால் சுற்றி சுற்றியது போக மீதமுள்ள நூல் கண்டை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஏவல் இறக்கும் மந்திரத்தை தினம் ஒன்றுக்கு 108 உரு வீதம் மூன்று நாட்களும் உருவேற்றவேண்டும்.

            அந்த பாவைக்கு படையலாக இறைச்சி வகைகளும், பழவகைகள், இனிப்பு வகைகள் அவல் கடலை மதுபானம் சுருட்டு முதலியன படைக்கவேண்டும் . ஒரு நாள் படைத்ததை மறுநாள் மாற்றி மீண்டும் புதிதாக படைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களும் படையல் படைக்க வேண்டும்.

            மூன்று நாட்கள் முடிந்தவுடன் அந்த பாவையை ஒரு மண் சட்டியில் வைத்து பூமியில் புதைக்க ஏவல் பில்லி சூனிய பாதிப்பு நீங்கி அந்த நபர் குணமடைவர். இப்படி ஆளே நேரில் வராமல் ஏவலை நீக்குவது மோடி வித்தை ஆகும்.

திங்கள், 25 நவம்பர், 2013

தோஷங்கள் உண்டாக காரணங்கள்

                 
                    தோஷங்கள் உண்டாக காரணங்கள் என்ற இந்த கட்டுரையில் ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக தோஷங்கள் எப்படி உண்டாகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

              நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை பெற்று நாம் பிறக்கிறோம். இந்த வினைப்பதிவை தானும் தனது வம்சாவழியினரும்  அனுபவித்தே தீரவேண்டும். இந்த கர்மப் பலனில் நன்மையையும் இருக்கும், தீமையும் இருக்கும், இந்த வினைப்பதிவின் சாரமே சஞ்சித கர்மம்.

                 இப்பிறப்பில் வாழும் காலத்தில் ஏற்று செய்யும் தொழிலின்                        ( கர்மத்தின் ) பால் நாம் பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகளை  குறிப்பது பிராப்த கர்மம்.

                   மனிதன் புற இச்சைகளில் மயங்கி தன் ஐம்புலன்களால் தொடர்ந்து செய்து வரும் காரியங்களின் வினைப்பதிவு ஆகாமிய  கர்மம்.

               கருவமைப்பின் வழி வந்த வினைப்பதிவு சஞ்சிதமாம் 
               உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தம் 
               இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம் 
               ஒருவினையும் வீண் போக உள்ளடங்கி பின் விளைவாம்.
                                                                          -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 
               
     தோஷங்கள் உண்டாக காரணங்கள் இந்த மூன்று வகையான கர்மங்கள் ஆகும். அவை 1. சஞ்சித கர்மம், 2.பிராப்த கர்மம், 3.ஆகாமிய கர்மம். கருவின் வழியில் வரும் சஞ்சித கர்மமும், உடலெடுத்த பின் தொழிலால் வரும் பிராப்த கர்மமும், இவ்விரண்டும் சேர்ந்து செயலாற்றும் போது விளையும் ஆகாமிய கர்மமும், இவ்வகையில் மூன்றும் தோன்றியபின் அந்த கர்மங்களின் பலனால் ஜாதகருக்கு நன்மை - தீமைகள் நடைபெறும்.

   இந்த மூன்று கர்மங்களால் விளையும் நற்பலன்களை ஜாதகத்தில் யோகமென்றும், தீய பலன்களை ஜாதகத்தில் தோஷம் என்றும் வகைப் படுத்துகிறோம்.