Translate

புதன், 30 ஏப்ரல், 2014

யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை!

                                    மகான்களும் யோகிகளும் ஒருபோதும் மறைவதில்லை, தமது உடலை ஆடைகளை களைவதை போல களைந்து சூக்கும உடலோடு சிவனுடன் ஒன்றி வாழ்கின்றனர். இதனையே திருமூலர் "யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்கிறார். இன்றைய காலகட்டத்தில் பல பேர் தனது பெயருக்கு முன்பு ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, வாலை என்றும், பெயருக்கு பின்னால் சித்தர் என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு அலைவதை மக்களை ஏமாற்றி பிழைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.

                    அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை, சகல காரிய சித்தி, ரசம், ரசாயனம், அஞ்சனம், பாதுகா சாதனம், மூலிகை, குளிகை, கட்சம், சரஸ்வதம், முதலிய சித்துகளும் அணிமா, மகிமா, லகிமா, கிரிமா, ஈஸித்வம், வசித்வம், பகுரூப சித்தி, சுரூப சித்தி என்னும் அஷ்ட மஹா சித்தி பெற்று சித்தனுக்கு சித்தனாய் பெரும் புகழ் பெற்று இம்மை இன்பத்தை அனுபவித்து தேவி சயுச்யம் அடைவார் என சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இன்று பெயருக்கு முன் வாலை என்றும் சித்தர் என்றும் போட்டு கொள்ளும் நபர்கள் மேலே சாஸ்திரம் சொல்லும் ஒரு சித்தினையாவது செய்து காட்ட இயலுமா? இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடனேயே தற்கலத்தில் வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சுரத் குமார், ஓஷோ, யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, சச்சிதானந்த சுவாமிகள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் பல சித்திகளை பெற்ற மஹா புருஷர்களும் கூட தன் பெயருக்கு முன்னால் வாலை என்றோ சித்தர் என்றோ அடைமொழிகளை போட்டுக் கொண்டதில்லை என அறியவும். ஏன் சிவனே ஆதிசங்கரராக அவதரித்தும் தன் பெயரை இன்றுவரை ஆதிசங்கரர் என்றே நிலைப்பெற செய்தார் எனவும் அறிக. சித்தர்கள் தமக்காக வாழாதவர்கள், தமக்காக காசு பணம் தேடாதவர்கள், என்றும் இறைவனுக்காகவும், இன்னலுற்ற மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள்.

யார் சித்தர் - சித்தர்களே சொல்கிறார்கள் ?

                                "சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல 
                                       சில்லறையாம் கருமத்துச் செய்கையல்ல 
                                  மித்தையெனும் சூனியமாம் மாயமல்ல 
                                        மின்னணுவாம் விஞ்ஞான வியப்புமல்ல 
                                  சித்தியெனில் ஈசனுடன் ஒன்றாம்சித்தி 
                                        சிவனாவானவனேதான்  சித்தன் சித்தன்!"

                               "தானான காயத்தை நிறுத்த வேண்டும் 
                                          சதாகாலம் சுக்கிலத்தைக் கட்டவேண்டும் 
                                வேனான மும்மலத்தை யறுக்க வேண்டும் 
                                           வெளியான சிதாபாசம் நீக்கவேண்டும் 
                                பானாக முச்சுடரை யறுக்க வேண்டும் 
                                           பாழான துலமதை வெறுக்கவேண்டும் 
                                மானான பராபரியை நிர்த்தனம் செய்து 
                                           மானிலத்தில் வாழ்பவனே சித்தனாமே"

                                "பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு 
                                  பிதமுற்ற பாசஇருளைத் துறந்து 
                                 மதமற் றெனதியான் மாற்றிவிட்டாங்கே 
                                   திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே"

                                 "நாணயமாய் நடப்பவரே ஞானி 
                                  யோகியமாய் நடப்பவரே யோகி 
                                  சகலமும் தள்ளியவரே சந்நியாசி 
                                  ஆண்டவனை அறிந்தவரே ஆண்டி 
                                  ஒழுக்கம் உடையவரே துறவி 
                                  சிந்தை தெளிந்திருப்பவன் அவனே சித்தன் 
                                  செகமெல்லாஞ் சிவமென்று அறிந்தோன் சித்தன்"

வாழ்க சித்தர்கள்!                                                                 வணங்குவோம் சித்தர் மலரடி! 

சனி, 26 ஏப்ரல், 2014

அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள்

        இதுவரையில் நமது வலைப்பதிவை வாசித்து வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது (சர்வ சக்தி விருட்ச பீடம், ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் - ஸ்ரீ லக்க்ஷ்மி தாச ஸ்வாமிகளின்) இதயம் கனிந்த நன்றிகள், அனைவரும் பதினாறு வகையான செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல என் அன்னை ஸ்ரீ மஹாலட்சுமி அருள்புரிவாளாக ! சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகைவேர் என்ற தலைப்பில் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பு பற்றி கடந்த 14 அக்டோபர் 2013ல் எழுதியிருந்தேன்  அந்த கட்டுரையை இன்று வரையில் 1897 வாசகர்கள் படித்து பயன்பெற்றனர், அதில் 51 வாசகர்கள் மட்டும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பினை வாங்கி பயன்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற்று வருகின்றனர், ஏன் அனைவரும் இதனை வாங்கி கொள்ள இயலவில்லை என்றால் இது அபூர்வமாய் கிடைக்கும் சஞ்சீவி மூலிகை இதன் விலையும் அதிகம், ஆகையால் பல நூறு வாசகர்கள் என்னை தொடர்பு கொண்டு நாங்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் கொஞ்சம் விலை குறைவாக தந்தால் அனைவரும் பயனடைவோம் என்று கேட்டு வந்தனர், இந்த பிரார்த்தனையை நான் அன்னையிடம் முறையிட்டு வேண்டி வந்தேன், அதன் பலனாக எனக்கு ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியை விட அபூர்வ சக்திகளை அளிக்கும் நான்கு வேர்களை கூட்டி காப்பு செய்து கொடு என்று உத்தரவு தந்தாள், அதனையே இக்கட்டுரையில் "அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள்" என்ற தலைப்பில் அதன் மகத்துவத்தை வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன், இந்த காப்பின் விலையும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியில் நான்கில் ஒரு பங்குதான் எனவே வாசகர்கள் அனைவரும் பயன்பெறலாம்.

சங்கு நாராயண சஞ்ஜீவி 

                   இந்த சங்கு நாராயண சஞ்ஜீவியும் சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்ஜீவிகளில் ஒன்றாகும், இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றனர். இதன் இலை பார்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்.
     

சிவப்பு நத்தைசூரி :
"எத்தை சொன்னாலும் அத்தை செய்யும் நத்தை சூரி" என்பது சித்தர் வாக்கு, அதாவது நாம் இந்த நத்தை சூரியை அணிந்து கொண்டு என்ன பலனை நினைத்து வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி நத்தை சூரிக்கு உண்டு. இந்த நத்தை சூரி நாம் வேண்டும் வரங்களை அருளும் அபூர்வ சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த நத்தை சூரியில் ஆறு வகைகள் இருந்தாலும் சித்தர்கள் பயன்படுத்தியது சிவப்பு நிற நத்தை சூரி, இந்த நத்தை சூரி கிடைப்பதற்கு அரிது என்றாலும் இந்த நத்தை சூரியே கேட்கும் வரங்களை அருளும், மற்ற வகை நத்தை சூரிக்கு இந்த சக்தி இல்லை. நத்தை சூரி சகல காரிய சித்தியை கொடுக்கும், லக்ஷ்மி கடாச்சத்தை உருவாக்கும், சகல ஜன வசியம், தொழில் வசியம், வியபார வசியம், நவ கிரக வசியம், தெய்வ வசியம் தரும். சகல காரியங்களிலும் வெற்றியை தேடி தரும்.

மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை :
மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்று சித்தர்களால் போற்றப்பட்டது வெள்ளை நிற பூக்களை உடைய விஷ்ணு கரந்தை ஆகும். நீல நிற பூக்களை கொண்ட விஷ்ணு கரந்தையை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளை நிற மலர்களை கொண்ட விஷ்ணு கரந்தையை பார்பதற்கு மிகவும் அரிது, இதுவும் அறிய வகை சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும். ஆகர்ஷணம் என்றால் அழைப்பு என்று பொருள், உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் ஈர்த்து நம்மிடம் தரும் வல்லமை கொண்டது இந்த மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்னும்  வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை.


கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை 

    இந்த கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையும்  அபூர்வ பலன்களை வாரி வழங்குவதாகும். மன்னர்கள் ஆண்ட காலங்களில் மன்னர்கள் தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க பயன் படுத்தியது இந்த கந்தர்வ ராஜ சஞ்சீவி மூலிகை. தம்முடைய கஜானாவில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் முதலான தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க, செல்வங்கள் மேலும் வந்து கஜானாவில் குவிய இந்த அபூர்வ கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையை தமது கஜானாவில் வைத்து குறிப்பிட்ட நாட்களில் பூஜைகளையும் அந்த மூலிகை வேருக்கு செய்து வந்தனர். கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை நம்மிடம் இருந்தால் நமது செல்வங்களை வற்றாமல் பாதுகாக்கும், செல்வங்களை நம் இல்லங்களில் குவிய வைக்கும்.

அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகை காப்பு :


                மேலே நாம் படித்து அறிந்த சங்கு நாராயண சஞ்ஜீவி, சிவப்பு நத்தைசூரி, மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை, கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை ஆகிய நான்கு மூலிகைகளையும் அதற்க்கு உரிய மந்திரங்களை உருவேற்றி ஒரு காப்பில் அடைத்து நமது வலது கையில் அணிந்து கொண்டால் மேலே நாம் கண்ட அனைத்து நட்பலன்களையும் அடைந்து பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.


தொடர்புக்கு :
         
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்

                  வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
         இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.

புதன், 16 ஏப்ரல், 2014

பரிகார ஹோமங்களும் அதன் பயன்களும்

           
மனிதனின் வாழ்வை அவனுடைய விதி அமைப்பை நிர்ணயம் செய்வதில் அவன் பிறக்கும் போது உண்டாகும் கோள்களின் (நவ கிரகங்கள்) அவனுடைய ஜாதகத்தில் நிற்க்கும் நிலையும், அதன் பார்வை பலமும், அவைகள் உண்டாக்கும் ஜாதக தோஷங்களும், அதனுடைய கோச்சார (கிரகங்களின் சுழற்ச்சி) பலமும் தான் ஒரு மனிதனுடைய விதி அமைப்பை நிர்ணயம் செய்கின்றன இந்த விதி அமைப்பால் அவனுக்கு நல்ல பலன்களோ அல்லது கெடுபலன்களோ உண்டாகின்றன, பிறப்புக்கள் ஏழு என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன, நாம் முற்பிறவிகளில் செய்த நல்ல காரியங்களால் அதற்க்கு தக்க யோகங்களும்,  முற்பிறவிகளில் செய்த பாவங்களால் அதற்க்கு தகுந்த தோஷங்களும் நமக்கு இப்பிறவியில் வந்து ஜாதகத்தில் அமைகிறது, அதற்க்கு தகுந்த பலன்கள் கிரகங்களின் கோச்சாரத்திலோ அல்லது கிரகங்களின் திசைகளிலோ நமக்கு வந்து அமைகிறது.

         இந்த தோஷங்கள் பலவகைப்படும். அவை செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் - இந்த தோஷங்களால் திருமணம் ஆவதில் கால தாமதமும், திருமணதிற்கு பின்பு கணவன் - மனைவி இடையே ஒற்றுமை குறைவும், வருமான குறைவும், சண்டை சச்சரவு உண்டாதல், விவாக ரத்தாதல் முதலிய கேடு பலன்களும் உண்டாகும். புத்திர தோஷம் - இந்த தோஷத்தால் குழந்தைகள் பிறக்காமல் போகும், அல்லது குழந்தைகள் பிறக்க காலதாமதம் ஆகுதல், அல்லது உனமுற்ற குழந்தைகள் பிறந்து நம் ஆயுள் வரை மன வேதனையை உண்டாக்குதல்., குடும்ப தோஷம் - இந்த தோஷத்தால் ஜாதகர் உரிய பருவத்தில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, பெற்றோர்களுடன் சந்தோஷமாக வாழ்வது இயலாது, திருமண தடை, புத்திரதடை, குடும்ப உறுப்பினர்கள் பிரிவு, ஒற்றுமை குறைவு, சிலருக்கு குடும்பமே இல்லாமல் போகும், குடும்ப வளர்ச்சி இருக்காது, ஜாதகருக்கு மகிழ்ச்சி என்பதே இருக்காது வீண் விரக்தியும் வீண் விரயமும் ஏற்படும்.

         மனை தோஷம் - இந்த தோஷத்தால் சொந்த மனை (வீடு) எளிதில் அமையாது, குடியிருக்கும் வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டகிக்கொண்டே இருக்கும், அடிக்கடி விபத்து, நோய் அதனால் மருத்துவ செலவுகள் உண்டாகும், தூக்கம் சரியாக இருக்காது, கெட்ட கனவுகள் உண்டாகும், பணம் கையில் தங்காது, உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்காது, கடன்கள் உண்டாகி வருத்தும், செல்லப்பிராணிகள் வீட்டில் வளராது, துக்க சம்பவங்கள் அடிக்கடி உண்டாகும்.

           மேலும் பிரேத தோஷம், குல தெய்வ தோஷம், மாந்தி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், காக வந்தியா தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், பூர்வ கர்ம தோஷம், பாவ கத்தாரி தோஷம், பிதுர் தோஷம், மதுர் தோஷம், பிராமண தோஷம், வாக்கு தோஷம், உன்மத்த (பைத்தியம்) தோஷம், சத்ரு தோஷம், செய்வினை தோஷம், திருஷ்டி தோஷம், ஆயுள் தோஷம், பூர்வீக தோஷம், பிரேத பிண்ட சாப தோஷம் இப்படி தோஷங்களை பற்றி சொன்னால் இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும், இத்தகைய சாபங்களும் தோஷங்களும் நாம் முன்பிறப்பில் பிறருக்கு செய்த பாவங்களால் நமக்கு உண்டானவை, அப்படி தோஷங்கள் வரும் அளவுக்கு யாருக்கு பாவங்கள் எவ்வழியில் செய்தோம் என்று நாம் ஜாதகத்தில் ஆராய்ந்து கண்டறிய முடியும், இவ்வகை பாவங்கள் நம்மை படைத்த இறைவனுக்கு நாம் செய்தது, இதனை நீக்க நாம் ஒரு உபயம் செய்தால் மட்டுமே நாம் தோஷங்களில் இருந்து தப்பி, இப்போது நாம் படும் துயரங்களில் இருந்து தப்பி நல்ல வாழ்வினை வாழ முடியும், அப்படி பட்ட ஒரு பரிகாரம் தான் தோஷங்களுக்கு உண்டான யாகங்களை (பரிகார ஹோமங்களை) செய்துகொள்வது.

         தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவையாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்களை சித்தி செய்து கொண்டதனை நாம் அறிவோம், இன்றும் நாடாள்பவர்களும், அரசியல்வாதிகளும், வசதிபடைத்தோரும் ஹோமங்கள் செய்து பலன்பெருவதை பத்திரிக்கை வாயிலாக நாம் அறிகிறோம்.

        ஹோமத்தின் போது கும்பங்கள் அமைத்து அதில் புனித நீரினை நிரப்பி, புனித பொருட்களை போட்டு அதன் மேல் மாவிலை தேங்காய் வைத்து நூல் சுற்றி சந்தனம் குங்குமம் பூக்கள் மாலைகளால் கும்பத்தை அலங்கரித்து அந்த கும்பத்தில் தெய்வங்களை ஆவாகனம் செய்து, குத்து விளக்கை அலங்கரித்து அதில் அஷ்ட இலட்சுமிகளை ஆவாகனம் செய்து, ஹோம நெருப்பில் தெய்வங்களை வசியம் செய்து வரவழைத்து பால், பழம், தேன், நெய் இவைகளை உணவாக கொடுத்து தெய்வங்களை திருப்திபடுத்தி அந்தந்த தெய்வங்களுக்கு உறிய மந்திரங்கள் ஓதி, நம்முடைய தோஷங்கள் நீங்கவேண்டும், நாம் வேண்டிய காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நம் தேவைகளை அந்த தெய்வங்களிடம் கூறும்போது தெய்வங்கள் நம் தோஷங்களை போக்கி நம் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. எனவே ஹோமங்கள் செய்வது நம் இன்னல்களை நீக்கி நம்மை வளமுடன் வாழ வைக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

சில ஹோமங்களும் அதன் பயன்களும் : 

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும். 

11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும். 

12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். 

13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும். 

14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

மேலும் விபரங்களுக்கு :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,


                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

கிருத்திகை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

           அறிவாற்றலும், நல்ல பேச்சாற்றலும், செயல் திறனும் மிக்கவர்கள். இவர்களின் தூக்கத்துக்கான நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும். இவர்களின் அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் மற்றவர்களை வியக்க வைக்கும், திட சித்தம் உடையவர்கள், நல்ல தலைமை பண்பு கொண்டு விளங்குவார்கள், உறவினர்களும் நண்பர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் மீது வெறுப்பு கட்டுவார்கள், நேர்மையும் நாணயமும் உள்ளவர்கள், அதே சமயம் நல்ல லாபம் அடையமுடியும் என்று இவர்களுக்கு தெரிந்தால் தவறான வழியில் நடக்க தயாராகவும் இருப்பார்கள், அரசியலில் செல்வாக்கும் அதன் மூலம் அதயமும் அடைவர், அனைவரையும் அனுசரித்து அரவனைத்து செல்லும் குணம் குறைவு அதனால் அனைவருடனும் கருத்து வேற்றுமையும் சண்டை சச்சரவுகளும் இவர்களுக்கு உண்டகிக்கொண்டே இருக்கும், இனிமையான வார்த்தைகளால் அனைவரையும் கவர்வார்கள், சுற்றத்தாரை விரும்பி வரவேற்கும் குணமும் இவர்களுக்கு உண்டு, இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் :
                                                   ஆதி அத்தி வரதராஜபெருமாள்



கிருத்திகை நட்சத்திர அன்பர்களின் அதிதெய்வம் "சத்யவிரத சேத்திரம்" என்னும் காஞ்சிபுரத்தில் அருளும் ஆதி அத்தி வரதராஜபெருமாள், இவரை 40 வருடத்துக்கு ஒரு முறை ஒரு மாதம் மட்டுமே தரிசிக்க முடியும். கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான் ஆகும்.
அக்னி தேவன் 

கிருத்திகை அக்னி தேவன் மந்திரம் 

கிருத்திகா அக்னிதேவத்யா :
மேஷ வாகன சம்ஸ்திதா !
ஸ்ருக் ஸ்ருவாவபீ திவரத்ரு :
சதுர்ஹஸ்தா நமாம்யஹம் !!

அக்னி காயத்திரி மந்திரம் 

ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே 
அக்னிமக்னாய தீமஹி !
தந்நோ அக்னி ப்ரசோதயாத் !!

கிருத்திகை நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ஓம் வன்னி தேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி 
தந்நோ கிருத்திகா ப்ரசோதயாத் 


கிருத்திகை நட்சத்திர பரிகார விருட்சம் 


கிருத்திகை  நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் அத்தி  மரம் ஆகும். பிரம்மாவுக்கு மிகவும் உகந்த அத்தி மரத்தை "பிரம்ம விருட்சம்" என்பார்கள். நவகிரகங்களில் சுக்கிரனுக்கு பிடித்தமான சமித்து அத்தி, மூதாதையருக்கு செய்யும் நேர்த்திக்கடன்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது இது, அத்தி சமித்து கொண்டு செய்யப்படும் வேள்வியால் சத்ரு நாசம் ஏற்படும், பில்லி சூன்யம் ஏவல் போன்ற கெடுதல்கள் நீங்கும், மனோபலம் உண்டாகும். பால் வடியும் மரம் ஆதலால் கார்மேகங்களை கவர்ந்திழுத்து மழையை பெய்யவைக்கும் சக்தி கொண்டது, அத்தி மரசுள்ளிகளால் செய்யப்படும் வேள்வியால் வெளிப்படும் புகை கருமேகங்களை ஈர்த்து மழை பொழியவைக்கும். கிருத்திகை   நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த கிருத்திகை  நட்சத்திரம் வரும் நாளில் அத்தி   மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று அத்தி  மரத்துக்கு நீர் உற்றுவதும், அத்தி  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். கிருத்திகை   நட்சத்திர அன்பர்கள் அக்னி  காயத்திரி, அக்னி   மந்திரம், கிருத்திகை   நட்சத்திர காயத்திரி மந்திரங்களை அத்தி   மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.



            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :




                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.



சனி, 5 ஏப்ரல், 2014

பரணி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                  "பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார்'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள், பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ இராசியில் இடம்பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழ பிறந்தவர்கள், சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள், சரியான அளவு, அமைப்புடன் கூடிய உடல்வாகு தோற்ற பொலிவு கொண்டவர்கள், நல்ல ஆரோகியமும் நீண்ட ஆயுளும் கொண்டவர்கள், சமயோஜித புத்தி கொண்டவர்கள், எத்தகைய துன்பத்தினையும் மனதால் போட்டு குழப்பிகொள்ளாமல், அறிவுப்பூர்வமாக அதனை சிந்தித்து துன்பத்தில் இருந்து வெளியேறுபவர்கள், சாந்தமான சுபாவமும் இரக்க குணமும் இயற்கையிலேயே அமைய பெற்றவர்கள், அதிவேக சிந்தனையும் செயல்திறனும் கொண்டவர்கள், பிறரை எளிதாக புரிந்து கொள்பவர்கள், பிரயாணத்தில் அதிக ஆர்வம் கட்டுவார்கள், காதல் மன்னர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள், திட சித்தம் இல்லாதவர்கள், இவர்கள் அதிகமான பகைவர்களை உண்டாக்கி கொள்வார்கள்.இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் :
பரணி நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் காளி அல்லது துர்க்கை ஆகும். பரணி நட்சத்திர அதி தேவதை யமன், இந்த பூவுலகில் பிறந்த உயிரினங்களின் ஆயுளை முடிப்பவன் யமனே, நீல நிற தேகம்கொண்டு கையில் பாசமும் தண்டமும் ஏந்தி, நீதியில் கூரான தராசு முள்போல நடுநிலை காப்பவன். எருமை வாகனம் ஏறுபவன், சூர்யனுக்கும் சாயா தேவிக்கும் மகனாக பிறந்தவன், சனீஸ்வரனின் சகோதரன் யமன், யமனே பரணி நட்சத்திர அதி தேவதை ஆகும்.

துர்க்கை காயத்திரி மந்திரம் 

                                         ஓம் காத்யாயனாய வித்மஹே 
                                                கன்யா குமாரீய தீமஹி !
                                          தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !!

யம காயத்திரி மந்திரம் 

பாச தண்டோஜ்வல புஜத்வயம் மகிஷ வாகனம் !
யமம் நீலதனும் பீர்ம பரணி தேவதாம் பஜே !!

பரணி நட்சத்திர காயத்திரி 

ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி !
தந்நோ பரணி ப்ரசோதயாத் !!


பரணி நட்சத்திர பரிகார விருட்சம் 

பரணி நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நெல்லி மரம் ஆகும். தவா என்றால் கருநெல்லி என்று பொருள். மஹா விஷ்ணுவுக்கு மாதவா என்று பெயர் உண்டு. லக்க்ஷ்மியின் அம்சம் தவாவுடன் சேர்ந்ததால் மாதவா என்று பெயர் வந்ததாக பெரியோர்கள் சொல்கிறார்கள். பரணி  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த பரணி  நட்சத்திரம் வரும் நாளில் நெல்லி  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று நெல்லி  மரத்துக்கு நீர் உற்றுவதும், நெல்லி  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பரணி  நட்சத்திர அன்பர்கள் துர்க்கா  காயத்திரி, யம  காயத்திரி  மந்திரம், பரணி  நட்சத்திர காயத்திரி மந்திரங்களை நெல்லி  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :




                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.


அஸ்வினி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

        அஸ்வினி நட்சத்திரதின் அதிபதி கேது பகவான் ஆகும். கேது பகவான் ஞானகாரகன், அதாவது ஞானத்துக்கு அதிபதி. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூட்சும புத்தி கொண்டவர்கள். ஆடை அணிகலன்களில்  ஆர்வம் கொண்டவர்கள், அனைவராலும் விரும்பப்படுபவர்கள், எடுத்த காரியங்களை எப்பாடு பட்டாவது முடிக்கும் திறன் கொண்டவர்கள், சாந்தமான குணம் உடையவர்கள், தாராள மனமும் உண்டு, மன உறுதி கட்டுப்பாடு மிகுந்தவர்கள், அதே சமயம் பணிவும் உண்டு, பிறரை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள், எந்த தொழிலை செய்தாலும் அர்வமுடனும் அக்கறையுடனும் செயல்பட்டு பிறரின் பாராட்டுக்களை பெறுவர், துணிச்சலும் தன்னம்பிக்கையும் இவர்களுக்கு இரு கண்களை போன்றது. அதே சமயம் இவர்கள் புகழுக்கு மயங்குவதும் உண்டு, வாழ்வின் சுக போகங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கட்டுவார்கள், மிகந்த செயல் திறன் கொண்ட இவர்களின் பேச்சு ஒன்றாகவும் செயல் வேறாகவும் இருக்கும், இவர்களுக்கு நல்லவர்கள் மட்டும் இன்றி தீய நண்பர்களின் நட்பும் இருக்கும், சரி இவர்களின் நல்ல குணங்கள் ஒருபுறம் இருக்கட்டும் இவர்களின் வாழ்வில் தடை கற்களாக விளங்கும் எதிர்மறை குணங்கள் விலகவும், இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் : 
        "திரியக் முகம்" என்ற சம நோக்கு கொண்டதாக 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சதிரதிற்கு அமிர்தத்துக்கு ஒப்பான வெண்ணிற ஆடை உடுத்தி நான்கு வேதங்களுக்கும் அதிபதியம் படைப்பு கடவுளான பிரம்மனுக்கு மனைவியாகி, கல்வியினை  ஞானதினை  உலகோருக்கு அருளும் அன்னை சரஸ்வதியே அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தெய்வமாகும்.

சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹெ
         விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி !
தன்னோ வாணீ ப்ரசோதயாத் !!

அஸ்வினி நட்சத்திர அதி தேவதைகள் அஸ்வினி தேவர்கள் ஆகும். இவர்கள் தேவ வைத்தியர்கள், சூரியனுக்கும் சஞ்ஞாதேவிக்கும் பிறந்தவர்கள், சஞ்ஞாதேவி பெண் குதிரை வடிவில் தவம் இயற்றிய போது சூரிய ஒளிபட்டு அந்த குதிரையின் நாசி துவாரத்தில் இருந்து தோன்றியவர்கள், அஸ்வம் என்றால் குதிரை, அஸ்வதில் இருந்து தோன்றியதால் அஸ்வினி தேவர்கள் என்ற பெயர் உண்டாயிற்று. அஸ்வினி தேவர்கள் இருவர், இவர்கள் இருவரும் இணை பிரியாமல் இருப்பார்கள். இவர்களே அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதைகள் ஆகும்.

அஸ்வினி தேவர்கள் மந்திரம் :

                           அஸ்வினீ  தேவதே ஸ்வேத வர்னௌ
                                          தாவஸ்விநௌ து மஹ : !
                            சுதா சம்பூர்ண கலச கராலஜெள
                                           அஸ்வ வாசு கநெள !!


பரிகார விருட்சம் :
                                        அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார விருட்சம் எட்டி மரம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்த போது அமிர்தத்தொடு ஆலகால விஷமும் வெளிப்பட்டது அல்லவா, அந்த விஷத்தால் உலகமே அழிந்து போய்விடும் என்று சிவ பெருமான் அவ்விஷத்தை தான் உண்டு உலகை காப்பாற்றினார். அந்த ஆலகால விஷத்தின் அடையாளம் தான் இந்த எட்டி மரம். உலகையே ஆலகால விஷத்தில் இருந்து காத்த பரமனுக்கு நன்றி சொல்லும் விதமாக அஸ்வினி தேவர்கள் எட்டி மர வனத்தில் தவம் இயற்றினர். அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் எட்டி மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று எட்டி மரத்துக்கு நீர் உற்றுவதும், எட்டி மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் சரஸ்வதி காயத்திரி, அஸ்வினி தேவர்கள் மந்திரம், அஸ்வினி நட்சத்திர காயத்திரி மந்திரங்களை எட்டி மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.

            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :




                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.