Translate

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அகத்தியர் ஜீவநாடி அற்புதங்கள் - 1

                                வைரக்கல் மோதிரத்தால் ஏற்பட்ட விபரீதம் 



                       "முன் ஜென்ம பாவம் என்று மட்டும் சொல்லி எங்களை பரிகாரம் செய்ய சொல்லாதீர்கள். அப்படி செய்து செய்து அலுத்துப் போய் விட்டோம். வேறு எதாவது சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம். எப்படியாவது எங்கள் கஷ்டம் விடிந்தால் போதும்" என்ற மிகுந்த வேதனையோடு சொல்லி என் முன்பு அமர்ந்தார் ஒரு நடுத்தர வர்கப் பெண் !

அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு ?

    நல்ல உத்தியோகத்தில் இருந்த என் கணவருக்கு திடீரென்று உத்தியோகம் பறிபோயிற்று. இரண்டாவது - நன்றாக படித்துக் கொண்டிருந்த என் பையன் எதோ பித்து பிடித்த மாதிரி வீட்டிலே உட்கார்ந்து எதையோ வெறித்து வெறித்துப் பார்த்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருக்கிறான். காலேஜுக்குப் போவதே இல்லை.

அப்புறம் ?

      எனது ஒரே மகள் பவித்ரா, நன்றாக இருந்தாள். புத்திசாலிப் பெண், வீட்டில் இருந்து வேலைக்கு செல்லமாட்டேன். தனியாக ஹாஸ்டலில் இருந்து தான் வேலைக்கு செல்வேன் என்று சொல்லி, வீட்டை விட்டு தனியாகச் சென்று விட்டாள். நான் பித்துப் பிடித்த மாதிரி இருக்கிறேன். எங்களுக்குண்டான சொத்து, தோட்டம், வீடு எல்லாம் திடீரென்று ஏற்பட்ட கடனுக்காக குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று. அப்படியிருந்தும் இன்னும் கடன் அடையவே இல்லை, என்று மூச்சுவிடாமல் சொல்லி, கொதித்து கொதித்து அழுதாள்.

பார்க்க பரிதாபமாக இருந்தது, கேட்கவும் சங்கடமாக இருந்தது.

         என் வினை தீர இதுவரையிலும் கடன் வங்கியே பல லட்சம் ஜோதிடத்திற்காக, பரிகாரதிற்காகச் செலவழித்துவிட்டேன். இனிமேல் என்னிடம் விற்பதற்கு ஒன்றுமே இல்லை என்றாள்.

கணவருக்கு எப்படி வேலை போயிற்று ?

            யாரோ செய்த தவறு இவர் மீது பழியாக விழுந்து பணம் கையாடினார் என்று சொல்லி வேலையே விட்டு நீக்கிவிட்டார்கள், இதுதான் எங்கள் குடும்பத்தில் விழுந்த முதல் அடி.

உங்கள் பையனுக்கு என்ன ஆயிற்று ?

             காலேஜுக்குப் போயிட்டுவந்தான். அவ்வளவுதான் தெரியும். மறுநாள் முதல் அவன் காலேஜுக்குப் போகவே இல்லை. பைத்தியம் போல் தனக்குத் தானே பேசிக் கொண்டான். போட்ட டிரஸ்சை மாற்றவும் இல்லை. குளிக்கவும் மாட்டான்.சாப்பிடுவதும் இல்லை. எதை கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான். எவ்வளவோ வைத்தியம் பண்ணிப் பார்த்தேன். நாளையோடு எட்டு மாசம் ஆகப் போகிறது. காலேஜுக்குப் போய். அவனுக்கு என்ன வந்தது, ஏன் எங்களுக்கு இந்தக் கஷ்டம் ? என்று மீண்டும் அழுதாள், சிறிது நேரம் பொறுமையாக இருந்தேன். 

             என் பொண்ணு கை நிறைய சம்பாதிக்கிறா, அவளை வச்சுதான் என் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட இருந்து குடும்ப பொறுப்பை ஏற்பாள் என்று எண்ணினேன். ஆனால் அவளோ இந்த வீட்டில் இருந்தால் நிம்மதியே இல்லை என்று தனியாக போய் ஆறு மாதம் ஆகிறது. என் குடும்பத்திற்கு யாராவது ஏதாவது பில்லி - சூன்யம் வச்சிருக்காங்களா ? என்றார் அந்த பெண்மணி !

               இந்த அம்மாள் சொன்னதை வைத்துப் பார்க்கும் பொழுது இது மாந்த்ரீகம் என்று கூட எனக்கு எண்ணத் தோன்றியது. பதினைந்து நிமிடம் அகத்தியரை நோக்கி பலமாகப் பிரார்த்தனை செய்தேன். பிறகு நாடியைப் புரட்டினேன். 

          சட்டென்று கிளம்பட்டும் இவள் தன் வீடு நோக்கி. இரு நாட்கள் கழித்து காலையில் அகத்தியரை வந்து பார்க்கட்டும் என்று தான் மாறி மாறி வந்ததே தவிர வேறு புதிய செய்திகள் எதுவும் என் கண்ணில் தென்படவே இல்லை.

           அம்மா உங்களுக்கு இன்றைக்கு அகத்தியர் வாக்கு எதுவும் வரவில்லை. ஆனால் கால தாமதம் செய்யாமல் உடனே வீட்டிற்குக் கிளம்பச் சொல்கிறார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் அகத்தியர் நிச்சயம் பதில் தருவார், என்று அவளைக் கிளப்ப முயன்றேன். 

                ஆனால் அவளோ நகரவே மறுத்தாள். வீட்டிலே போய் நான் என்ன செய்யப் போகிறேன். இங்கேயே எத்தனை நேரமானாலும் இருந்து நாடி பார்த்துவிட்டுதான் செல்வேன் என்று அடம் பிடித்தாள்.

               அகத்தியர் சொன்னால் அதற்க்கு என்னவோ ஓர் காரணமிருக்கும் தயவு செய்து வீட்டிற்க்கு கிளம்புங்கள். வேறு எங்கேயும் செல்லாமல் நேராக வீட்டிற்கே செல்லுங்கள் என்று மிகவும் கட்டாயப்படுதினேன். இது எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது.

            ஆனால் அந்தப் பெண்ணோ வாய்க்கு வந்தபடி பேசினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

               அகத்தியர் மீது தான் எனக்கு கோபம் வந்தது. எனக்கெதற்கு  இந்த வீண் பழி. எதற்காக இந்த கேவலமான பேச்சு என்று மனம் நொந்து போனேன்.

             அந்த பெண்மணி மிகுந்த வருத்தத்தோடும் கோபத்தோடும் போனது மட்டும் எல்லோரும் பார்த்த உண்மை ! இதற்குப் பிறகு என்னைப் பார்க்க வந்திருந்த மற்றவர்களுக்கு நாடி படிக்க மனதே இல்லை.

நான்கு மணி நேரம் கழிந்தது.

           அந்த பெண்மணியிடமிருந்து எனக்கு டெலிபோன் வந்தது ! நேரில் திட்டியது இல்லாமல் டெலிபோனில் வேறு திட்டப் போகிறாள் போலும் என எண்ணிக் கொண்டே டெலிபோனைக் கையில் எடுத்தேன்.

             ஐயா, என்னை மன்னிச்சிடுங்க. தெரியாத்தனமா உங்களையும் திட்டினேன், அகத்தியரையும் திட்டினேன். நல்ல வேளை நான் உடனே வீட்டிற்குப் போகவில்லை என்றால்  தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என் மகனை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். இதற்க்கு நான் அகத்தியருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.

             அவளது பேச்சிலிருந்து அவள் மிகப் பெரிய அதிர்ச்சியிலிருந்து தப்பிய சந்தோஷம் இருப்பதை அறிந்து கொண்டேன்.

              பையன் ஏதோ விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு தூக்க மாத்திரையை அளவுக்கு மீறிச் சாப்பிட்டு மயங்கிக் கிடப்பதை அகத்தியர் அறிந்து, அவனது உயிரைக் காப்பாற்ற அவனது தாயை உடனடியாக அனுப்பியிருக்கிறார். இருந்தாலும் அவன் நல்லபடியாக குணமாக டாக்டர்கள் 48 மணி நேரம் ஆகும் என்றதால், இரண்டு நாட்கள் கழித்து பையனை அழைத்துக் கொண்டு வருவதாக அந்த அம்மணி சொல்ல நான் அறிந்து கொண்டேன்.

               அகத்தியருக்கு நானும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக் கொண்டேன். 

                மூன்று நாள் கழிந்தது.

               அந்த பெண்மணி தன் பையனோடு என்னைப் பார்க்க வந்தாள். காலில் விழுந்து அவளது மகன் ஆசீர்வாதம் பெற்றான். எதற்க்காக இந்த கஷ்டகாலம் அது எப்போது நிவர்த்தியாகும் என்பதை மட்டும் அகத்தியர் சொன்னால் போதும் அதற்காக என்ன பிரார்த்தனை வேண்டுமானாலும்  செய்யத் தயார் என்றாள் அந்தப் பெண். அகத்தியரிடம் அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன்.

                 அவளது கணவர் லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டு போனவர். அவருக்கு ஒரு நாளாவது ஒரு ரூபாயாவது லஞ்சம் வாங்கவில்லை என்றால் வீட்டிற்கு திரும்ப மனதே வராது. இவ்வளவுக்கும் மிகப்பெரிய கம்பெனியில் அன்றைக்கு எந்த லஞ்சமும் கிடைக்கவில்லை என்றால் அலுவலகத்தில் உள்ள எதையாவது ஒரு பொருளை, குறைந்தபட்சம் குண்டூசி பாக்கெட்டையாவது எடுத்து சட்டை பைக்குள் போட்டுக் கொள்வர். அப்படிப்பட்ட மனிதருக்கு ஒரு முக்கியமான நபர் முக்கியமான காரியத்தை முடித்து கொடுக்க விலை உயர்ந்த நீலக்கல் வைரம் பதித்த ஒரு மோதிரத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

                சாதாரண குன்டூசியையே விடாமல் கொண்டு வரும் அந்த மனிதனுக்கு புளுஜாகர் வைர மோதிரம் கிடைத்தால் விட்டு விடுவாரா ? சந்தோஷத்துடன் வாங்கி தன் கால் சட்டைக்குள் மறைத்துக் கொண்டார். அந்த புளுஜாகர் வைரம் எவ்வளவு கொடுமையான பலன் தரும் என்பதை அவர் அறியவில்லை. அறிந்திருந்தால் அதனைக் கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்திருப்பார், அல்லது தூர எறிந்திருப்பார். அந்த வைர மோதிரத்தை எப்பொழுது கையை நீட்டி வாங்கினாரோ அந்த நிமிடத்திலிருந்து அவருக்குக் கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது.

                அந்த வைர மோதிரம் கொடுத்த நபருக்காக தவறான முயற்சியில் இறங்கி மாட்டிக் கொண்டார். பதவி பறிபோயிற்று. அப்பொழுதாவது அவர் யோசித்திருக்க வேண்டும். எதற்காக இந்த பதவி பறிபோயிற்று என்று. யோசிக்கவில்லை, விதியும் அவரை யோசிக்க விடவில்லை.

                    வீட்டில் வைத்திருந்த அந்த புளுஜாகர் மோதிரத்தை அவரது மகன் ஒரு நாள் அணிந்து கொண்டான். அன்று முதல் அவனுக்கு சட்டென்று புத்தி பேதலித்து விட்டது.

                     பைத்தியக்காரன் போல் ஆனான், அதன் உச்சகட்டம் தான் அவனை தற்கொலைக்கு தூண்டியது.

                     நன்றாக வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த இந்தப் பெண்மணிக்குறிய சொத்து, வீடு, மனை, வாகனம் அத்தனையும் அந்த வைர மோதிரத்தால் பறி போயிற்று. இப்பொழுது அவளது மகளையும் வீட்டில் இருக்க விடாமல் குடும்பத்தை விட்டே வெளியே துரத்தி இருக்கிறது என்று சொன்ன அகத்தியர், அந்த புளுஜாகர் வைர மோதிரத்தை தலை சுற்றி தூக்கி எறி. வாழ்க்கை மீண்டும் வசந்தமாகும் என்றவர், இது முன் ஜென்ம கர்மாவா இல்லை இந்த ஜென்மத்தில் செய்த தவறா ? என்பதை இந்த பெண்ணே முடிவு செய்து கொள்ளட்டும் என்று ஒரு வைர மோதிரக் கதையை அற்புதமாக சொன்னார். 

                   அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை என்று பின்னர் என்னிடம் வந்த அந்த பெண்மணியும் அவளது கணவரும் ஒப்புக் கொண்டார்கள். பீரோவில் வைக்கப்பட்ட அந்த வைர மோதிரத்தின் விலை நான்கு இலட்சம் என்றாலும் அது நாற்பது இலட்ச ரூபாய் குடும்பச் சொத்தை பாழடித்து விட்டது இப்போது அது எங்கேயோ குப்பை மேட்டில் கிடக்கிறது.

                 ஆனால், அந்த மோதிரத்தை தூக்கி எறிந்த பின்னர் வீழ்ந்த அந்த குடும்பம் இன்றைக்கு மீண்டும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
                                                        -  நன்றி, தெய்வத்திரு ஹனுமத்தாசன் ஐயாவுக்கு,




            தினத்தந்தி நாளிதழில் வெள்ளி தோறும் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட அனுபவ நிகழ்சிகள் அடங்கிய அற்புத தொடர்களை தொகுத்து நான்கு பாகங்களாக நாடி சொல்லும் கதைகள் என்ற பெயரில் கடந்த 2010 ம் ஆண்டு வெளியிடப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த அற்புதமான புத்தகத்தினை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

                   அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்,
                    எண் : 9, பாஸ்கர் தெரு, நேரு நகர்,
                    சாலிகிராமம், சென்னை - 600 093.
                     செல் : 94441 60161.




ஜீவநாடி பலன்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

புதன், 24 செப்டம்பர், 2014

பூரம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 பூரம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            பூரம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்த சிந்தனையில் திளைப்பவர்கள், இனிமையான பேச்சால் வெற்றி அடைபவர்கள், சில நேரங்களில் அவசர புத்தியால் நிதானம் தவறுபவர்கள், எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவர்கள், உழைப்பால் உயர்பவர்கள், உயரிய புகழினை அடையும் ஆற்றல் பெற்றவர்கள், வாதம் புரிவதில் ஆர்வம் கொண்டவர்கள், முன்கோபமும் இவர்களிடம் உண்டு, தர்ம குணமும் உண்டு, சங்கீதம், நடனம், நடிப்பு, ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள், சேமிக்கும் குணம் இராது, அதிகமான செலவு செய்பவர்கள், ஒரே நேரத்தில் பலவகையான தொழிலினை செய்யும் திறன் இருக்கும், எவ்வகையிலாவது கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று உழைப்பவர்கள், எப்பொழுதும் எதிர்காலத்தை பற்றியே யோசித்த வண்ணம் இருப்பவர்கள், 


அதி தேவதையும், அதி தெய்வமும் :




பூரம் நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் சென்னை - புரசைவாக்கத்தில் அருள்பாலிக்கும் கங்காதீஸ்வரர் ஆகும். அதி தேவதை சூரியன் ஆகும்.





பூரம்  நட்சத்திர அதிதேவதை மந்திரம் 

ஸ்ம்பூஜயாமி அர்யமாணம் பல்குனி தார தேவதாம் !
தூம்ரவர்ணம் ரதாரூடம் ஸஸக்திகர சோயினம் !!


பூரம் நட்சத்திர காயத்திரி 

அரியம்நாய   வித்மஹே பசுதேஹாய தீமஹி !
தந்நோ பூர்வ பால்குநீ  ப்ரசோதயாத் !!


பூரம்  நட்சத்திர பரிகார விருட்சம் 

மகம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் புரசை அல்லது பலாசம் எனப்படும்  மரம் ஆகும். இதன் பூக்களை அக்னி பூக்கள் என்று சொல்லுவார்கள், செந்தூரபூ என்றும் வர்ணிக்கப்படுகிறது, வைதீகத்தில் புரசு என்றும் பிரம்மஸ்வரூபம் என்பர், பிரம்ம விருட்சம் என்று சொல்லும் இம்மரத்தால் ஆன கரண்டிகளையே ஹோமம் செய்ய பயன் படுத்துவர்,  பூரம்  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த பூரம்  நட்சத்திரம் வரும் நாளில் புரசை  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று புரசை  மரத்துக்கு நீர் உற்றுவதும், புரசை  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பூரம்   நட்சத்திர அன்பர்கள் பூரம்  நட்சத்திர  காயத்திரி,  பூரம்  நட்சத்திர  மந்திரங்களை புரசை  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.



 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :


ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :                        
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.