Translate

வியாழன், 24 அக்டோபர், 2013

அமானுஷ்யம் - மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்

       கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ............. என்ற நபர் சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து என்னை சந்தித்தார். பார்பதற்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அவர் முகம் மட்டும் களையிழந்து சோகம் படர்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் அவரே தனக்கு நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.
             நான் இரவில் நிம்மதியாக தூங்கி பத்து வருட காலம் ஆகிவிட்டது, எனது படுக்கை அறையில் சென்று மின்விசிறியை ஆன் செய்தால் அந்த மின்விசிறியில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமாக வந்து பாட்டுப்படி என்னை கேலி செய்கிறது. மின்விசிறியை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தல் அதே ஆண் பெண் உருவங்கள் சுவற்றில் வந்து நிர்வாணமாக நடனமாடுகிறது, நானும் எனது மனைவியும் படுக்கையில் இருந்ததை சொல்லி கேலி செய்கிறது. பகலில் காரை ஓட்டிச் சென்றால் எதிரில் வரும் வாகனதில் இதே உருவங்கள் நிர்வாணமாக வந்து நடனமாடி கேலி செய்கிறது, இதனை ஒருகணம் பார்த்தல் உடனே விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதுவரை கடந்த பத்து வருடத்தில் சுமார் இருபது முறை விபத்து உண்டாகி அதில் தப்பிதிருகிறேன், அதேபோல் வியாபாரத்திலும் இந்த பத்து வருடத்தில் கையில் இருந்த 22 கோடி ரூபாயை இழந்து மேலும் 3 கோடி கடனுமாகி அந்த கடனுக்கு மதம் 6 இலட்சம் ரூபாய் வரை வட்டி கட்டி வருவதாகவும், இப்படி தனக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பிறரிடம் சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று முத்திரை குத்துகிறார்கள். கட்டிய மனைவியும் பெற்ற மகளும் கூட நான் சொல்வதை நம்பவில்லை மாறாக என்னை கேலி செய்கின்றனர். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து என்னை காப்பாற்றி என் வியாபாரங்கள் மீண்டும் செழித்து கடன்கள் அடைந்து நிமதியாக நான் வாழ வழிகாட்ட வேண்டும் என்று கெஞ்சினார்.
             இதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு பூஜையில் அமர்ந்து இவருக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம், அதை எப்படி நீக்குவது என்பதை என் அன்னையிடம் கேட்டேன். என் அன்னை எனக்கு தெளிவுபடுத்தினாள். பின் அவருக்கு விஷயங்களை தெளிவாக விளக்கினேன்.
             உங்கள் முதல் மனைவி என்ன செய்தார் என்றேன்? அவளுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை வரவில்லை, அவளுடன் வாழ விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடுத்துவிட்டேன் என்றார். பின் இரண்டு வருடம் கழிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், இப்போது   என் மகளுக்கு 22 வயதாகிறது. அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் என்றார்.
                உங்கள் முதல் மனைவி தான் நீங்கள் நிம்மதியுடன் வாழவே கூடாது என்று திறமையான ஒரு மந்திரீகரை அழைத்து மோகினிகளை வைத்து  உருவேற்றி ஏவலை செய்து வைத்துள்ளார். அந்த மோகினி உருவங்களே வந்து உங்களுக்கு  துன்பம் தருகிறது. அந்த ஏவல் தான் உங்கள் குடும்பமும், வியாபாரமும் சீர் குலைந்ததற்கு காரணம் என்று சொன்னேன்.
              இந்த ஏவலை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் போக்க முடியும். மிகவும் கடுமையான விஷயம் தான் கவனமாக நீக்க வேண்டும் இதில் கரணம் தப்பினால் இதை போக்கும் எனக்கு மரணம் தான் என்றேன். இருந்தாலும் உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது நாளை வாருங்கள் உங்களுக்கான பரிகாரங்களை துவக்கி விடுகிறேன் என்றேன்.
                மறுநாள் அவரும் வந்தார் சில கடினமான பரிகார முறைகளை மேற்கொண்டு அவருக்கு செய்து வைத்த ஏவலை நீக்கி அவரை அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவருக்கு அந்த அமானுஷ்ய சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை, மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார். அவரின் வியாபாரங்களும் நன்றாக நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்....

அமானுஷ்யம் - வீட்டால் வந்த வேதனை

         
கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு  நமது சர்வ சக்தி விருட்ச பீடத்துக்கு ஒரு கணவனும் மனைவியும் வந்திருந்தனர் பெயர் திரு/திருமதி. சுந்தரம் (பகத்தூர் கிராமம், சிறுமுகை, கோவை மாவட்டம் ), வந்திருந்த தம்பதிகளுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் அவர்களின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. எதோ ஒரு தீராத சிக்கலில் சிக்கி தவிப்பது மட்டும் எனக்கு தெரிந்தது. சரி ஜீவநாடியில் சித்தர்களின் வாயிலாகவே தெரிந்து கொள்வோம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் வேறு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை விறு விறுவென ஜீவநாடி ஓலைச்சுவடியை பிரித்து படிக்க ஆரம்பித்தேன். ஜீவநாடியில் அவர்கள் குடியிருக்கும் வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாகவும் ஓலைச் சுவடியை அவர்கள் குடியிருக்கும் இல்லத்துக்கு எடுத்துச் சென்று பூஜித்து படிக்கும் படியும் எனக்கு கட்டளையை அகத்தியர் சொன்னார். நாடியில் வந்த விஷத்தை அவர்களிடம் சொன்னேன் அவர்களும் உடனே வாருங்கள் எங்கள் இல்லத்துக்கு செல்வோம் என்றனர். உடனே நானும் எனது சகாக்களுடன் புறப்பட்டோம்.
              அவர்கள் இல்லம் களையே இல்லாமல் இருந்தது. வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு வித அச்சம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.சிறிது நேரத்தில் அந்த தம்பதியினர் சில விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். ஒரு நாள் கூட இந்த வீட்டில் இரவு நிம்மதியாக உறங்க முடியவில்லை. எதோ ஒரு உருவம் காலில் கொலுசு அணிந்துக் கொண்டு நடமாடும் சத்தம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்பதாகவும், ராட்சச உருவங்கள் அனைவரின் கனவிலும் வந்து பயமுறுத்துவதாகவும் இது போன்ற பதிப்பு தொடர்ந்து வீடு வாங்கிய நாளில் இருந்து தொடர்ந்து எழு வருடமாக தினம் தினம் நடைபெறும் சம்பவங்கள் என்றும் இதுவரை யாரும் இரவில் நிம்மதியாக உறங்கியதில்லை என்றும், சிறு குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் உடலிலும் முகத்தினை தவிர அறாத புண்கள் உண்டாகியுள்ளது இதுவரை பலப் பல மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை என்றும் சொல்லிமுடிதனர். இனி நீங்கள் தான் எங்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க சொன்னனர்.
                       அந்த வீட்டின் பூஜை அறையை கேட்டு அங்கு அமர்ந்து சுவடியை பூஜித்து இவர்களின் நல்வாழ்வுக்கு சித்தர்களே நல்வழி கட்ட வேண்டும் என்று பிராத்தித்து ஜீவநாடியை திறந்து படிக்க ஆரம்பித்தேன். ''இந்த இல்லத்தில் இதற்க்கு முன் வாசித்தவருக்கு ஆகாத சிலர் வைத்த ஏவல் இந்த வீட்டில் இருப்பதாகவும், அது மட்டும் இல்லாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த ஒரு கற்பஸ்திரியின் ஆவியும் அங்கு உலவுவதாகவும்'' ஜீவநாடியில் அகத்தியர் சொல்லி முடித்தார். நாடியில் வந்ததை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் பல மாந்திரீகர்களை அழைத்துவந்து பலப்பல பரிகாரங்களை செய்தோம் இலட்சங்கள் கரைந்ததே தவிர பலன் ஒன்றும் இல்லை நீங்கள் தான் இந்த பிரச்சனையில் இருந்து மீள வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடினார்.
                           அந்த தம்பதியிடம் மறுநாள் வாருங்கள் வலிசொல்கிறேன் என்று சொல்லி கிளம்பினேன். சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து இவர்களின் துயரை தீர்க்க நீயே உடனிருந்து வழிநடத்த வேண்டும் என்று என் இஷ்ட தெய்வம் ஸ்ரீ மகா லக்ஷ்மியையும் சித்தர்களையும் வேண்டிக்கொண்டேன். என் தெய்வமும் நீ செய் என்று உத்தரவு தந்தது மகிழ்வுடன் உறங்கச் சென்றேன்.
                           மறுநாள்  அந்த தம்பதியினர் வந்தனர் அவர்களிடம் செய்ய வேண்டிய பூஜை முறைகளை விளக்கினேன். அதன் படி மூன்று நாட்கள் பூஜித்து அவர்களின் வீட்டில் இருந்த ஏவலை போக்கினேன். அவர்களுக்கு 15 நாள் உருவேற்றி ஒரு வராகி எந்திரத்தை அவர்கள் வீட்டில் தலை வாசலுக்கு மேலே பூஜித்து மாட்டினேன்.

பறந்து வந்த எந்திர தகடு 
                                                      அன்று எந்திரதகடை மாலை ஐந்து மணிக்கு மாட்டி பூஜித்து கிளம்பினேன். சுமார் இரவு 11 மணி இருக்கும் நானும் எனது சாகவும் வேறு ஒரு வீட்டில் பூஜைக்கு புறப்பட்டு வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். சுந்தரம் செல்போனில் அழைத்தார் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது என்ன நடந்தது என்று விசாரித்தேன். இரவு 10.45 க்கு அனைவரும் உறங்கச் சென்றோம்.கதவுகள் அனைத்தும் தாழிட்டு விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தது. இரவு விளக்கு ஒன்று மட்டும் எரிந்தது. அனைவரும் டிவியில் ஒலிக்கும் படலை கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருந்தோம். உறங்கிய இடம் ஹால் சுமார் 10 அடி துரத்தில் வாசலில் நீங்கள் மாட்டிய வாராகி எந்திரம் எங்கள் அருகில் பறந்து வந்து விழுந்தது. இது எப்படி சத்தியம் எங்களுக்கு பயமாக உள்ளது உடனே நீங்கள் வாருங்கள் என்றார். நான் வேறு ஒரு நபரின் ஏவலை தீர்க்க பயணப்பட்டு சென்று கொண்டிருப்பதை சொன்னேன். எந்த பயமும் பட தேவையில்லை எந்திரத்தை எடுத்து மீண்டும் மாட்டிவிட்டு பயப்படாமல் துங்கும்படி சொன்னேன். பேசி முடித்து 2 நிமிடம் கூட இருக்காது மீண்டும் செல்போனில் அழைத்தார். என்ன நடந்தது என்றேன் எந்திர தகடு மாட்டியஉடன் தகடு சுவற்றில் டமார் டமார் என்று தட்டி மோதிக்கொள்கிறது  எங்களுக்கு பயமாக உள்ளது பயணத்தை முடித்துக் கொண்டு உடனே வரவேண்டும் என்று கெஞ்சினார். எந்த பயமும் வேண்டாம் எல்லாம் வாராகி அம்மன் செயல் பயப்படாது தூங்குங்கள் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் ஒரு 5 நிமிடம் கடந்திருக்கும் மீண்டும் அழைத்தார். ஆன் செய்து பேசினேன் வீட்டில் உள்ள அனைவரின் கைகளும் இழுப்பது போல் உள்ளது உடனே வரவேண்டும் என்று சொல்லி அவரின் குரல் கம்மியது. அவரிடம் சொன்னேன் நான் கொடுத்து வைத்த விபூதியை கொஞ்சம் எடுத்து அனைவரும் பூசிக்கொள்ளும் படி சொன்னேன் அவ்வாறே செய்தார். இனி எந்த தொந்தரவும் உங்களுக்கு வராது நிம்மதியுடன் உறங்குங்கள் காலையில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி போனை வைத்தேன்.
                         மீண்டும் காலையில் செல்போனில் அழைத்தார். இரவு நடந்த மர்மங்களை விளக்கும் படி கேட்டார். நானும் சொன்னேன். 3 நாள் பூஜையில் உங்கள் வீட்டில் இருந்த ஏவலையும், ஆவியையும்  விரட்டினேன். ஆனாலும் நிறைவேறாத ஆசையுடன் இறந்த அந்த பெண்ணின் ஆவி மீண்டும் உங்கள் வீட்டில் நுழைய முயற்சி செய்தது அதை தடுத்து அடித்துக் கொல்லவே வாராகி எந்திரம் பறந்து வந்து விழுந்தது. ஏனென்றால் அந்த எந்திரத்தின் பின்புறம் ஒரு துஷ்ட சக்திகளை ஒடுக்கும் சக்தி வாய்ந்த மூலிகை வேர் வைத்து பிரேம் செய்திருப்பதை சொன்னேன். சரி மீண்டும் சுவற்றில் மாட்டிய பிறகு தானாக டமார் டமார் என்று அடித்து கொண்டது எதனால் என்றார். எந்திரம் பறந்து வந்து அந்த கெட்ட ஆவியை அடித்து விழுந்ததும் அதில் வைத்திருந்த வேர் அந்த கெட்ட ஆவியை பிடித்துக் கொண்டது அதை அடித்து விரட்டவே  தானாக சுவற்றில் அடித்துக் கொண்டது என்றேன். மீண்டும் ஒரு கேள்வியை கேட்டார் எங்களின் கைகள் பிடித்து இழுப்பது போல் இருந்தது எதனால் என்றார். அந்த எந்திரத்தை மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுங்கள் நான் வாழ்ந்த வீட்டில் நான் இருந்துகொள்கிறேன் என்று அந்த ஆவி உங்களின் கைகளை பிடித்து கெஞ்சியது.அதை அங்கிருந்து உங்களை தொந்தரவு செய்யாமல் விரட்டவே நான் மந்திரித்து கொடுத்து சென்ற விபூதியை அனைவரும் வைத்துக்கொள்ளும்படி சொன்னேன் என்றேன். அப்போது தான் அவருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. மீண்டும் அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்..... 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட்க்காக வாங்கவுள்ள நிலம்
















ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் மற்றும் சர்வ சக்தி விருட்ச பீடம் (வைபவ லட்சுமி திருக்கோவில் ) அமைக்க வாங்கவுள்ள நிலத்தின் புகைப்படங்கள் நல் உள்ளம் கொண்டவர்கள் உதவலாம். இந்த நிலத்தில் வைபவ லட்சுமி கோவில் , தினசரி மூன்று வேளையும் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மூலிகை பண்ணை, மூலிகை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கூடம் மற்றும் இலவச மருத்துவ மனை, இலவச கல்வி கூடம், இலவச வேத பாட சாலை,இலவச மனவள கலை யோகாசன பயிற்சி சாலை, ஊனமுற்றோர் மனவளர்ச்சி குன்றியோற்கென தனி ஊக்குவிப்பு மையம், இலவச போதை பழக்கங்கள் நீக்கும் மையம் போன்ற எண்ணற்ற மக்கள் நல பணிகள் ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் செய்யுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக நிலம் வாங்குதல் கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. இப்பணிகளுக்கு நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் நன்கொடை தந்து உதவ வேண்டுகிறோம். நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு 80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டு. மேலும் ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் பெற்றுள்ள அங்கீகாரங்கள் : 80G, 12A, FCRA,35AC,35AC-I, 35AC-II. நன்கொடைகள் அளிக்க ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட், அலைப் பேசி எண்கள் : 099440 99980, 085260 74891.

திங்கள், 14 அக்டோபர், 2013

சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகை வேர்

         

  • பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.


            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

            சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி ஆகும். மனிதன்  வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

               இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர். சர்வ சக்தி விருட்ச பீட ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை. அலை பேசி : 099440 99980, 085260 74891.